«أَسْوَأُ النَّاسِ سَرَقَةً الَّذِي يَسْرِقُ صَلَاتَهُ»، قَالَ: وَكَيْفَ يَسْرِقُ صَلَاتَهُ؟ قَالَ: «لَا يُتِمُّ رُكُوعَهَا، وَلَا سُجُودَهَا»
பாடம்:
ருகூவையும், ஸஜ்தாவையும் முழுமையாக செய்யாதவருக்கும் திருடன் என்ற பெயர்.
1888. “திருடர்களில் மிகவும் மோசமான திருடன் தொழுகையில் திருடுபவன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது “அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் எப்படி ஒருவன் திருடுவான்?” என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு “தனது ருகூவையும், ஸுஜூதையும் முழுமையாகச் செய்யாதவனே அந்தத் திருடன்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)