🔗

இப்னு ஹிப்பான்: 2073

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«لَا يَقُومُ أَحَدُكُمْ إِلَى الصَّلَاةِ وَهُوَ بِحَضْرَةِ الطَّعَامِ وَلَا هُوَ يُدَافِعُهُ الْأَخْبَثَانِ الْغَائِطُ وَالْبَوْلُ»


பாடம்:

நாம் கூறிய கருத்து சரியானது என்று தெளிவாக உணர்த்தும் இரண்டாவது செய்தி.

2073. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களில் எவரும் உணவு வந்து காத்திருக்கும்போதும், சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக்கொண்டும் தொழவேண்டாம்” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)