«لَا تُوتِرُوا بِثَلَاثٍ، أَوْتِرُوا بِخَمْسٍ، أَوْ بِسَبْعٍ، وَلَا تَشَبَّهُوا بِصَلَاةِ الْمَغْرِبِ».
பாடம்:
ஒருவர் மூன்று ரக்அத் வித்ர் தொழும்போது (அதைப்) பிரிக்காமல் தொழுவது கண்டனத்திற்குரிய செயல்.
2429. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்று ரக்அத் (எண்ணிக்கையில்) வித்ருத் தொழாதீர்கள்; ஐந்து அல்லது ஏழு ரக்அத் வித்ருத் தொழுங்கள். (மூன்று ரக்அத் வித்ருத் தொழுகையை) மஃக்ரிப் தொழுகையைப் போன்று தொழாதீர்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)