شَهِدْتُ ابْنَ عَبَّاسٍ، صَلَّى عَلَى جَنَازَةٍ فَقَرَأَ بِفَاتِحَةِ الْكِتَابِ، فَلَمَّا انْصَرَفَ قُلْتُ لَهُ: أَتَقْرَأُ بِفَاتِحَةِ الْكِتَابِ؟ قَالَ: «نَعَمْ، يَا ابْنَ أَخِي سُنَّةٌ وَحَقٌّ»
3072.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் நடத்திய ஒரு ஜனாஸா தொழுகையில் நான் கலந்து கொண்டேன். அவர்கள் அல்ஹம்து அத்தியாயத்தை அதில் (சப்தமாக) ஓதினார்கள். தொழுது முடித்ததும் அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு இது பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள், “எனது சகோதரரின் மகனே! இது நபிவழியும், உண்மையும் ஆகும்’ என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: தல்ஹா பின் அப்துல்லாஹ் (ரஹ்)