«إِذَا وَضَعْتُمْ مَوْتَاكُمْ فِي اللَّحْدِ، فَقُولُوا: بِسْمِ اللَّهِ وَعَلَى سُنَّةِ رَسُولِ اللَّهِ»
பாடம் :
பிரேதத்தை குழிக்குள் இறக்கும்போது பிஸ்மில்லாஹ் கூறுவது.
3110. உங்களில் இறந்தவர்களை உட்குழிக்குள் வைக்கும் போது ‘பிஸ்மில்லாஹி வஅலா சுன்ன(த்)தி ரசூலில்லாஹ்’ எனக் கூறுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)