«إِنَّ الصِّيَامَ لَيْسَ مِنَ الْأَكْلِ وَالشُّرْبِ فَقَطْ، إِنَّمَا الصِّيَامُ مِنَ اللَّغْوِ وَالرَّفَثِ، فَإِنْ سَابَّكَ أَحَدٌ، أَوْ جَهِلَ عَلَيْكَ، فَقُلْ: إِنِّي صَائِمٌ»
பாடம்:
ஒருவர் தனது நோன்பின் போது தவிர்க்க வேண்டியவற்றில் மிகக் குறைந்தது (அடிப்படையானது) உண்பதும் பருகுவதும் தான் என்பதற்கான தெளிவான விளக்கம்.
3479. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நோன்பு என்பது உணவையும் பானத்தையும் தவிர்ப்பது மாத்திரமல்ல; மாறாக நோன்பு என்பது வீணான செயல்கள் மற்றும் ஆபாசமான பேச்சுகளிலிருந்தும் தவிர்ந்து இருப்பதேயாகும். உங்களை எவராவது திட்டினால் அல்லது உங்களிடம் அறியாமையாக நடந்துகொண்டால், ‘நிச்சயமாக நான் நோன்பாளி’ என்று அவரிடம் கூறிவிடுங்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
இப்னு ஹிப்பான்-அபூஹாதிம் இமாம் கூறுகிறார்:
ஹாரிஸ் பின் அப்துர்ரஹ்மான் பின் அபூதுபாப் அவர்களின் தந்தையின் சகோதரர் பெயர் அப்துல்லாஹ் பின் முஃகீரா பின் அபூதுபாப் அத்தவ்ஸீ என்பதாகும்.
ஹாரிஸ் பின் அப்துர்ரஹ்மான் பின் அபூதுபாப் அவர்களின் முழுப்பெயர் ஹாரிஸ் பின் அப்துர்ரஹ்மான் பின் முஃகீரா பின் அபூதுபாப் என்பதாகும்.