«تُفْتَحُ أَبْوَابُ الْجَنَّةِ كُلَّ اثْنَيْنِ وَخَمِيسٍ، وَتُعْرَضُ الْأَعْمَالُ فِي كُلِّ اثْنَيْنِ وَخَمِيسٍ»
பாடம்:
ஒவ்வொரு திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. மேலும் அவ்விரண்டிலும் அடியார்களின் செயல்கள் அல்லாஹ்விடம் சமர்ப்பிக்கப்படுகின்றன என்பது பற்றி…
3644. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வொரு திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. மேலும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் (மனிதர்களின் அனைத்துச்) செயல்களும் (அல்லாஹ்விடம்) சமர்ப்பிக்கப்படுகின்றன.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)