«كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَحَضَرَ النَّحْرُ، فَاشْتَرَكْنَا فِي الْبَقَرَةِ سَبْعَةً، وَفِي الْبَعِيرِ سَبْعَةً أَوْ عَشْرَةً»
பாடம்:
நாம் (குர்பானியில் கூட்டு சேர்வது) அனுமதிக்கப்பட்டவை என்பதைத் தெளிவாக விளக்கும் மற்றொரு செய்தி பற்றிய குறிப்பு:
4007. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தபோது, குர்பானி (எனும் அறுத்து பலியிடும்) காலம் வந்தது. அப்போது ஒரு மாட்டில் ஏழு பேரும், ஒரு ஒட்டகத்தில் ஏழு பேரோ அல்லது பத்து பேரோ, பங்கு சேர்ந்து கொண்டோம்.