«إِذَا صَلَّتِ الْمَرْأَةُ خُمُسَهَا، وَصَامَتْ شَهْرَهَا، وَحَصَّنَتْ فَرْجَهَا، وَأَطَاعَتْ بَعْلَهَا دَخَلَتْ مِنْ أَيِّ أَبْوَابِ الْجَنَّةِ شَاءَتْ»
பாடம்:
ஒரு பெண் அல்லாஹ்வின் கடமைகளை நிறைவேற்றுவதுடன் கணவனுக்கும் கட்டுப்பட்டு நடந்தால் அவளுக்கு சொர்க்கம் கடமையாகிவிடுகிறது என்பது பற்றி வந்துள்ள செய்திகள்.
4163. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண் ஐந்துவேளை தொழுகைகளைத் தொழுது; ரமலான் மாதம் நோன்பு நோற்று; தனது கற்பைப் பேணிநடந்து; தனது கணவனுக்கு கட்டுப்பட்டு நடந்தால் அவள் சொர்க்கத்தில், தான் விரும்பிய வாசல் வழியாக நுழைவாள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
அபூஹாதிம்-இப்னு ஹிப்பான் இமாம் கூறுகிறார்:
இந்தச் செய்தியை அபூஸலமாவிடமிருந்து, அப்துல்மலிக் பின் உமைர் மட்டுமே தனித்து அறிவிக்கிறார்.
இவ்வாறே, அப்துல்மலிக் என்பவரிடமிருந்து ஹுத்பா பின் மின்ஹால் மட்டுமே தனித்து அறிவிக்கிறார்.
ஹுத்பா பின் மின்ஹால் அவர்கள், (ஈரான் நாட்டின்) அஹ்வாஸ் என்ற பகுதியை சேர்ந்தவராவார்.