🔗

இப்னு ஹிப்பான்: 4570

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«إِنِّي لَا أَخَافُ عَلَى أُمَّتِي إِلَّا الْأَئِمَّةَ الْمُضِلِّينَ، وَإِذَا وُضِعَ السَّيْفُ فِي أُمَّتِي لَمْ يُرْفَعْ عَنْهُمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ»


பாடம்:

தனது சமுதாயம் வழிகெடுக்கும் தலைவர்களுக்கு கட்டுபட்டு நேரான பாதையை விட்டு தூரமாகிவிடுவார்கள் என்பது பற்றி நபி (ஸல்) அவர்களின் அச்சம்.

4570. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது சமுதாயத்தின் விசயத்தில் நான் பயப்படுவதெல்லாம் வழிகெடுக்கும் தலைவர்களை குறித்துதான். எனது சமுதாயத்தில் வாள் வீசப்பட்டால் மறுமைநாள் வரை அது அவர்களை விட்டு அகற்றப்படாது.

அறிவிப்பவர்: ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி)