«أَلَا أُخْبِرُكُمْ بِمَنْ تُحَرَّمُ عَلَيْهِ النَّارُ»؟ قَالُوا: بَلَى يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «عَلَى كُلِّ هَيِّنٍ، لَيِّنٍ، قَرِيبٍ، سَهْلٍ»
பாடம்:
மேற்கண்ட (ஹதீஸ் எண்-469 இல் இடம்பெறும்) செய்தியை அப்தா பின் ஸுலைமான் மட்டுமே தனித்து அறிவிக்கிறார் என்போரின் வாதத்தை முறியடிக்கும் செய்தி.
470. (ஒரு தடவை) நபி (ஸல்) அவர்கள், “நரகம் தடைசெய்யப்பட்ட ஒருவரை பற்றி உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? என்று கேட்டார்கள்.
அதற்கு மக்கள், “ஆம் அறிவியுங்கள் அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “பணிவுள்ள; நாகரீகமிக்க; மக்களின் நெருக்கத்திற்குரிய; மென்மையான ஒவ்வொருவருக்கும் நரகம் தடைசெய்யப்பட்டதாகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)