قُلْتُ لِعَائِشَةَ: يَا أُمَّ الْمُؤْمِنِينَ، أَيُّ شَيْءٍ كَانَ يَصْنَعُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ عِنْدَكِ؟ قَالَتْ: «مَا يَفْعَلُ أَحَدُكُمْ فِي مِهْنَةِ أَهْلِهِ، يَخْصِفُ نَعْلَهُ، وَيَخِيطُ ثَوْبَهُ، وَيَرْقَعُ دَلْوَهُ»
5676. உர்வா அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நான், ‘‘முஃமின்களின் தாயாரே! நபியவர்கள் தங்களது வீட்டில் இருக்கும் போது என்னென்ன செய்வார்கள்?’’ என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், ‘‘தம் வீட்டாருக்குத் தேவையான வேலைகளைச் செய்து வந்தார்கள். மேலும் தமது செருப்பைத் தாமே தைத்துக் கொள்வார்கள். தமது ஆடை (கிழிந்திருந்தால்) தாமே தைத்துக் கொள்வார்கள். மேலும் தமது (தண்ணீர் இரைக்கும்) வாளியைச் சரிசெய்வார்கள்’’ என்று சொன்னார்கள்.