أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ فُلَانَةً ذَكَرَ مِنْ كَثْرَةِ صَلَاتِهَا، غَيْرَ أَنَّهَا تُؤْذِي بِلِسَانِهَا قَالَ: «فِي النَّارِ»، قَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ فُلَانَةً ذَكَرَ مِنْ قِلَّةِ صَلَاتِهَا وَصِيَامِهَا، وَأَنَّهَا تَصَدَّقَتْ بِأَثْوَارِ أَقِطٍ، غَيْرَ أَنَّهَا لَا تُؤْذِي جِيرَانَهَا، قَالَ: «هِيَ فِي الْجَنَّةِ»
5764.
…
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் “அல்லாஹ்வின் தூதரே! ஒரு பெண் (கடமையானதைத் தொழுது மற்ற தொழுகைகளையும்) அதிகமாகத் தொழுகிறாள். எனினும் அவள் தனது நாவினால் (அண்டை வீட்டாருக்கு தொல்லை கொடுக்கிறாள். (அவளது மறுமை நிலை என்ன)” என்று கேட்டார். அதற்கு “அவள் நரகத்தில் இருப்பாள்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அம்மனிதர் “அல்லாஹ்வின் தூதரே! ஒரு பெண்ணின் (உபரியான) தொழுகையும், நோன்பும் குறைவாகவே உள்ளது. அவள் பாலாடைக் கட்டிகளைத் தான்) தர்மம் செய்கிறாள். எனினும் அவள் தனது அண்டைவீட்டாருக்குத் தொல்லை கொடுப்பதில்லை. (அவளது மறுமை நிலை என்ன?)” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அவள் சொர்க்கத்தில் இருப்பாள்” என்று கூறினார்கள்.