«إِنَّكُمْ تُدْعَوْنَ يَوْمَ الْقِيَامَةِ بِأَسْمَائِكُمْ وَأَسْمَاءِ آبَائِكُمْ، فَحَسِّنُوا أَسْمَاءَكُمْ»
பாடம் :
மறுமைநாளில் வானவர்கள் பெயர்கூறி அழைக்க இருப்பதால் குழந்தைகளுக்கு அழகான பெயர் சூட்டவேண்டும் என்ற கட்டளை.
5818. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் உங்களுடைய தந்தையின் பெயருடன் உங்களது பெயரால் நீங்கள் அழைக்கப்படுவீர்கள். ஆகையால் உங்களது பெயர்களை அழகுபடுத்திக் கொள்ளுங்கள்.
அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி)