أَنَّ رَجُلًا، قَالَ: يَا رَسُولَ اللَّهِ أَنَبِيٌّ كَانَ آدَمُ؟ قَالَ: «نَعَمْ، مُكَلَّمٌ»، قَالَ: فَكَمْ كَانَ بَيْنَهُ وَبَيْنَ نُوحٍ؟ قَالَ: «عَشَرَةُ قُرُونٍ»
பாடம்:
ஆதம் (அலை) அவர்களுக்கும், நூஹ் (அலை) அவர்களுக்கும் இடையில் உள்ள தலைமுறையினர் பற்றி வந்துள்ள செய்திகள்.
6190. ஒரு மனிதர் (நபி-ஸல் அவர்களிடம்) “அல்லாஹ்வின் தூதரே! ஆதம் (அலை) அவர்கள் நபியா? என்று கேட்டார். அதற்கவர்கள், “ஆம், அவர் அல்லாஹ்விடம் பேசிய நபி” என்று பதிலளித்தார்கள். அந்த மனிதர், “ஆதம் நபிக்கும், நூஹ் நபிக்கும் இடைப்பட்ட காலம் எவ்வளவு? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 10 தலைமுறை என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)