لَمَّا رَأَيْتُ مِنَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طِيبَ نَفْسٍ، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، ادْعُ اللَّهَ لِي، فَقَالَ: «اللَّهُمَّ اغْفِرْ لِعَائِشَةَ مَا تَقَدَّمَ مِنْ ذَنَبِهَا وَمَا تَأَخَّرَ، مَا أَسَرَّتْ وَمَا أَعْلَنَتْ»، فَضَحِكَتْ عَائِشَةُ حَتَّى سَقَطَ رَأْسُهَا فِي حِجْرِهَا مِنَ الضَّحِكِ، قَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيَسُرُّكِ دُعَائِي؟ »، فَقَالَتْ: وَمَا لِي لَا يَسُرُّنِي دُعَاؤُكَ فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَاللَّهِ إِنَّهَا لَدُعَائِي لِأُمَّتِي فِي كُلِّ صَلَاةٍ»
பாடம்:
வல்லமை மிக்க, உயர்ந்தோன் அல்லாஹ் ஆயிஷா (ரலி) அவர்களின் முன், பின் பாவங்களை மன்னித்துவிட்டான் என்ற செய்தி.
7111. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்ட நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! எனக்காக அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறினேன். உடனே அவர்கள், அல்லாஹும் மக்ஃபிர் லிஆயிஷா மா தகத்தம மின் தம்பிஹா , வமா தஅக்கர , மா அஸர்ரத் , வமா அஃலனத் என்று பிரார்த்தனை செய்தார்கள்….
(அதனால் நான் மகிழ்ச்சியில் சிரித்தேன்…
அதற்கு நபி (ஸல்) அவர்கள், என்னுடைய இந்த பிரார்த்தனை உனக்கு சந்தோசத்தை ஏற்படுத்துகிறதா? என்று கேட்டார்கள். அதற்கு நான் உங்களின் இந்த பிரார்த்தனையால் நான் சந்தோசம் அடையாமல் இருப்பேனா? என்று கூறினேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் மீது ஆணையாக! எனது சமுதாயத்திற்காக ஒவ்வொரு தொழுகையிலும் இந்த பிரார்த்தனையை நான் செய்கிறேன் என்று கூறினார்கள்.