بَيْنَا أَنَا أَسِيرُ مِنَ اللَّيْلِ إِذَا رَجُلٌ يُكَبِّرُ، فَأَلْحَقْتُهُ بَعِيرِي، قُلْتُ: مَنْ هَذَا الْمُكَبِّرُ؟ قَالَ: «أَبُو هُرَيْرَةَ»، قُلْتُ: مَا هَذَا التَّكْبِيرُ؟ قَالَ: «شُكْرًا»، قُلْتُ: عَلَى مَهْ؟ قَالَ: «عَلَى أَنِّي كُنْتُ أَجِيرًا لِبُسْرَةَ بِنْتِ غَزْوَانَ بعُقْبَةِ رِجْلِي، وَطَعَامِ بَطْنِي، فَكَانَ الْقَوْمُ إِذَا رَكِبُوا، سُقْتُ لَهُمْ، وَإِذَا نَزَلُوا خَدَمْتُهُمْ، فَزَوَّجَنِيهَا اللَّهُ فَهِيَ امْرَأَتِي الْيَوْمَ، فَأَنَا إِذَا رَكِبَ الْقَوْمُ رَكِبْتُ، وَإِذَا نَزَلُوا خُدِمْتُ»
பாடம்:
அபூஹுரைரா அத்தவ்ஸீ (ரலி).
7150. முளாரிப் பின் ஹஸ்ன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒருநாள் நான் இரவில் பயணம் செய்துகொண்டிருந்தேன். அப்போது ஒருவர் தக்பீர் சொல்வதைக்கேட்டு எனது ஒட்டகத்தை வேகமாகச் செலுத்தி அவரை அடைந்தேன். அவரிடம், “தக்பீர் சொல்லும் தாங்கள் யார்?” என்று கேட்டேன். அதற்கு அவர் “நான் அபூஹுரைரா” என்று பதிலளித்தார்.
நான் “ஏன் தக்பீர் சொல்கிறீர்கள்?” என்று வினவினேன். அவர் “அல்லாஹ்வுக்கு நன்றி சொல்கிறேன்” என்றார். “எதற்காக நன்றி சொல்கிறீர்கள்?” என்று நான் கேட்டபோது, “முன்பு நான் புஸ்ரா பின்த் ஃகஸ்வான் என்பவருக்கு வேலைக்காரனாக இருந்தேன். என் வேலை, அவர்களின் பயணவாகனத்தை கால்நடையாக ஓட்டிச் செல்வதும், எனக்கு வயிறு நிறைய உணவு பெறுவதும் மட்டும்தான். அவர்கள் பயணம் செய்யும்போது நான் அவர்களின் வாகனங்களை ஓட்டுவேன். இறங்கும்போது அவர்களுக்கு சேவை செய்வேன். ஆனால், அல்லாஹ் அவளை எனக்கு மனைவியாக ஆக்கினான். இன்று அவள் என் மனைவி. அவர்கள் பயணம் செய்யும்போது நானும் பயணிக்கிறேன். அவர்கள் இறங்கும்போது எனக்கு சேவை செய்யப்படுகிறது” என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.