🔗

இப்னு ஹிப்பான்: 7333

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ مِقْدَارَ نِصْفِ يَوْمٍ مِنْ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ يُهَوِّنُ ذَلِكَ عَلَى الْمُؤْمِنِينَ كَتَدَلِّي الشَّمْسِ لِلْغُرُوبِ إِلَى أَنْ تَغْرُبَ»


பாடம்:

அல்லாஹ் தன் பேரருளால் மறுமை நாளின் நீண்ட (விசாரணைக் காலத்தை) முஃமின்களுக்கு எளிதாக்குதல். எந்த அளவுக்கென்றால், அவர்களுக்கு அது ஒரு சிறிய பகுதியாக மட்டுமே தோன்றும்.

7333. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஐம்பதாயிரம் வருடங்களுக்குச் சமமான ஒரு நாளின் அரைப் பொழுது, அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வின் முன்னால் மக்கள் (விசாரணைக்காக) நிற்பார்கள். ஆனால், இறைநம்பிக்கையாளர்களுக்கு அந்த நாள், சூரியன் மறைவதற்காகக் கீழ்நோக்கிச் சென்று மறையும் நேரம் போல் எளிதாகிவிடும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)