🔗

ibn-khuzaymah-1518: 1518

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

ثَلَاثَةٌ لَا تُقْبَلُ مِنْهُمْ صَلَاةٌ، وَلَا تَصْعَدُ إِلَى السَّمَاءِ، وَلَا تُجَاوِزُ رُءُوسَهُمْ: رَجُلٌ أَمَّ قَوْمًا وَهُمْ لَهُ كَارِهُونَ، وَرَجُلٌ صَلَّى عَلَى جَنَازَةٍ وَلَمْ يُؤْمَرْ، وَامْرَأَةٌ دَعَاهَا زَوْجُهَا مِنَ اللَّيْلِ فَأَبَتْ عَلَيْهِ


பாடம்:

ஒருவர் தன்னை வெறுக்கக்கூடியவர்களுக்கு தொழைவைப்பது பற்றி வந்துள்ள கண்டனம்.

1518. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூவரின் தொழுகைகள் அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படாது. அவை வானை நோக்கியும் உயராது. (ஏன்) அவர்களின் தலையைக் கூட கடந்து செல்லாது.

அவர்கள்:

1 . மக்கள் அவரை வெறுத்தும் அவர்களுக்கு தொழுகை நடத்துபவர்.

2 . கட்டளையின்றி (அனுமதியின்றி) ஜனாஸா தொழுகை நடத்துபவர்.

3 . இரவில் தன் கணவன் அழைத்தும் அவருக்கு கட்டுப்படாமல் மறுத்தவிட்ட பெண்.

அறிவிப்பவர்: அதாஉ பின் தீனார் (ரஹ்)