1519. ஹதீஸ் எண்-1518 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரில் அனஸ் (ரலி) வழியாக நபியின் சொல்லாக வந்துள்ளது.
இப்னு குஸைமா இமாம் கூறுகிறார்:
(ஹதீஸ் எண்-1518 இல் இடம்பெறும்) முதல் செய்தி முர்ஸல் தான் என்றாலும் அதை நான் இந்த நூலில் எழுதியுள்ளேன். காரணம் அதற்கு அடுத்துள்ள இந்த செய்தி மவ்ஸூல் (அதாவது அறிவிப்பளர்தொடரில்) இடைமுறிவில்லாத செய்தியாகும். இந்த செய்தி இல்லாவிட்டால் (நம்முடைய) இந்த நூலில் நான் முர்ஸலான செய்தியை பதிவு செய்திருக்கமாட்டேன்.