كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ يَوْمَ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ، وَيَقُولُ: «إِنَّ هَذَيْنِ الْيَوْمَيْنِ تُعْرَضُ فِيهِمَا الْأَعْمَالُ»
பாடம்:
திங்கள், வியாழக்கிழமைகளில் நோன்பு வைப்பது நல்லது. ஏனெனில் அந்த நாட்களில் (அடியார்களின்) செயல்கள் அல்லாஹ்விடம் சமர்ப்பிக்கப்படுகின்றன.
2119. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திங்கள், வியாழக் கிழமைகளில் நோன்பு வைப்பார்கள். மேலும் அவர்கள், “இந்த இரண்டு நாட்களில் (அடியார்களின்) செயல்கள் (அல்லாஹ்விடம்) சமர்ப்பிக்கப்படுகின்றன என்றும் கூறுவார்கள்.
அறிவிப்பவர்: உஸாமா பின் ஸைத் (ரலி)