«تُعَادُ الصَّلَاةُ مِنْ مَمَرِّ الْحِمَارِ، وَالْمَرْأَةِ، وَالْكَلْبِ الْأَسْوَدِ» قُلْتُ: مَا بَالُ الْأَسْوَدِ مِنَ الْكَلْبِ الْأَصْفَرِ، مِنَ الْكَلْبِ الْأَحْمَرِ، فَقَالَ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمَا سَأَلْتَنِي، فَقَالَ: «الْكَلْبُ الْأَسْوَدُ شَيْطَانٌ»
பாடம்:
தொழும் போது பெண் குறுக்கே செல்வது குறித்து இடம்பெற்றுள்ள செய்தி, ஆயிஷா (ரலி) அவர்களின் செய்திக்கு முரணானது அல்ல என்பதற்கான ஆதாரம்:
நபி (ஸல்) அவர்கள் (தொழுகையை முறிக்கும் என்று) குறிப்பிட்டது நாய், பெண், கழுதை ஆகியவை குறுக்கே கடந்து செல்வதைத்தான். மாறாக நாய் அங்கேயே இருப்பதோ, அல்லது கழுதை அங்கேயே இருப்பதோ, அல்லது பெண் குறுக்கே படுத்திருப்பதோ தொழுகையை முறிக்காது. ஆயிஷா (ரலி) அவர்கள், தான் நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் படுத்திருந்ததாகவே அறிவிக்கிறார்கள்; தான் குறுக்கே கடந்து சென்றதாகக் கூறவில்லை.
831. அப்துல்லாஹ் பின் ஸாமித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“கழுதை, பெண், கருப்பு நாய் ஆகியவை குறுக்கே கடந்து சென்றால் தொழுகை மீண்டும் தொழப்பட வேண்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.
அப்போது நான் நான் (அபூதர் (ரலி) அவர்களிடம்), “சிவப்பு, மஞ்சள் நிற நாய்களை விட்டுவிட்டு கருப்பு நாயை மட்டும் குறிப்பிடுவதன் காரணம் என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நீ என்னிடம் கேட்டது போலவே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், “கருப்பு நாய் ஷைத்தானைப் போன்றதாகும்” என்று பதிலளித்தார்கள் எனக் கூறினார்கள்.