خَرَجْنَا حَتَّى قَدِمْنَا عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَبَايَعْنَاهُ، وَصَلَّيْنَا خَلْفَهُ، ثُمَّ صَلَّيْنَا وَرَاءَهُ صَلَاةً أُخْرَى، فَقَضَى الصَّلَاةَ، فَرَأَى رَجُلًا فَرْدًا يُصَلِّي خَلْفَ الصَّفِّ، قَالَ: فَوَقَفَ عَلَيْهِ نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ انْصَرَفَ قَالَ: «اسْتَقْبِلْ صَلَاتَكَ، لَا صَلَاةَ لِلَّذِي خَلْفَ الصَّفِّ»
பாடம்:
ஒருவர் தொழுகை வரிசைக்கு பின்னால் தனியான தொழுவது.
1003. அலீ பின் ஷைபான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் புறப்பட்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்தோம். அவர்களிடம் உறுதிமொழி எடுத்தோம். அவர்களுக்குப் பின்னால் தொழுதோம்.
பின்னர் மற்றுமொரு தொழுகையை அவர்களுக்குப் பின்னால் தொழுதோம். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும், ஒரு மனிதர் வரிசைக்கு பின்னால் தனித்துத் தொழுவதைக் கண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் தனது தொழுகையை முடித்துத் திரும்பியதும் அந்த மனிதரிடம் நின்று, “உமது தொழுகையை மீண்டும் தொழுவீராக! வரிசைக்கு பின்னால் தனித்துத் தொழுபவருக்குத் தொழுகை இல்லை” என்று கூறினார்கள்.