أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «كَانَ إِذَا أَتَاهُ أَمْرٌ يَسُرُّهُ أَوْ بُشِّرَ بِهِ، خَرَّ سَاجِدًا، شُكْرًا لِلَّهِ تَبَارَكَ وَتَعَالَى»
1394. நபி (ஸல்) அவர்களுக்கு ஏதேனும் மகிழ்ச்சியளிக்கும் செய்தி வந்தாலோ அல்லது அது குறித்து நற்செய்தி கூறப்பெற்றாலோ உடனே வளமும், உயர்வும் மிக்க அல்லாஹ்விற்கு நன்றி தெரிவிக்க ஸஜ்தாவில் விழுவார்கள்.
அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி)