🔗

இப்னுமாஜா: 1442

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«مَنْ أَتَى أَخَاهُ الْمُسْلِمَ، عَائِدًا، مَشَى فِي خَرَافَةِ الْجَنَّةِ حَتَّى يَجْلِسَ، فَإِذَا جَلَسَ غَمَرَتْهُ الرَّحْمَةُ، فَإِنْ كَانَ غُدْوَةً، صَلَّى عَلَيْهِ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ حَتَّى يُمْسِيَ، وَإِنْ كَانَ مَسَاءً، صَلَّى عَلَيْهِ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ حَتَّى يُصْبِحَ»


1442. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தனது முஸ்லிமான சகோதரனை நலம் விசாரிக்க சென்றால் அவர் திரும்பி வந்து அமரும் வரை சொர்க்கத்தின் கனிகளைப் பறித்துக் கொண்டிருக்கிறார். அவரை இறையருள் சூழ்ந்து கொள்கிறது.

அவர் நலம் விசாரிக்க காலையில் செல்வாரானால் எழுபதாயிரம் மலக்குகள் அவருக்காக மாலைவரை துஆச் செய்கிறார்கள். அவர் மாலையில் நலம் விசாரிக்கச் சென்றால் காலைவரை எழுபதாயிரம் மலக்குகள் அவருக்காக துஆச் செய்கிறார்கள்.