” لَا تَحِلُّ الصَّدَقَةُ لِغَنِيٍّ إِلَّا لِخَمْسَةٍ: لِعَامِلٍ عَلَيْهَا، أَوْ لِغَازٍ فِي سَبِيلِ اللَّهِ، أَوْ لِغَنِيٍّ اشْتَرَاهَا بِمَالِهِ، أَوْ فَقِيرٍ تُصُدِّقَ عَلَيْهِ فَأَهْدَاهَا لِغَنِيٍّ، أَوْ غَارِمٍ “
பாடம்:
ஸகாத் பொருள் யாருக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது?
1841. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஐந்து நபர்களைத் தவிர வேறு எந்த செல்வந்தருக்கும் ஸகாத் பொருள் ஆகுமானதல்ல. (அவர்கள் யாரென்றால்)
1 . ஸகாத்தை வசூலிக்கும் பணியாளர்.
2 . அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்.
3 . தனது செல்வத்தைக் கொடுத்து ஸகாத் பொருளை விலைக்கு வாங்கிக்கொண்டவர்.
4 . ஏழையான அண்டைவீட்டார் ஒருவருக்கு வழங்கப்பட்ட ஸகாத் பொருளை, அந்த ஏழையிடமிருந்து அன்பளிப்பாக பெற்ற செல்வந்தர்.
5 . கடன்பட்டவர்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)