أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِبَعْضِ الْمَدِينَةِ، فَإِذَا هُوَ بِجَوَارٍ يَضْرِبْنَ بِدُفِّهِنَّ، وَيَتَغَنَّيْنَ، وَيَقُلْنَ:
[البحر الرجز]
نَحْنُ جَوَارٍ مِنْ بَنِي النَّجَّارِ … يَا حَبَّذَا مُحَمَّدٌ مِنْ جَارِ
فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُ يَعْلَمُ إِنِّي لَأُحِبُّكُنَّ»
1899. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மதீனாவின் சில பகுதியைக் கடந்து சென்றபோது அங்கே பெண்களில் சிலர் (தஃப்) கஞ்சிரா எனும் இசைக் கருவியை அடித்தவர்களாக பாட்டுப்பாடிக் கொண்டிருந்தனர். (நபி ஸல் அவர்களைக் கண்ட அவர்கள் கீழ்கண்டவாறு) கவிதைகளைப் படித்தனர்:
“நாங்கள், பனூ நஜ்ஜாரைச் சேர்ந்த பெண்கள்; முஹம்மத் (ஸல்) அவர்கள் எங்களின் அண்டை வீட்டாராக இருப்பது எவ்வளவு சிறப்புமிக்கது!.
அப்போது நபி (ஸல்) அவர்கள், “(எனது வருகையினால் சந்தோசமடையும்) உங்கள் மீது நான் நேசம் வைத்துள்ளேன் என்பதை அல்லாஹ் அறிவான்” என்று கூறினார்கள்.