إِذَا أَفَادَ أَحَدُكُمُ امْرَأَةً، أَوْ خَادِمًا، أَوْ دَابَّةً، فَلْيَأْخُذْ بِنَاصِيَتِهَا، وَلْيَقُلْ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ خَيْرِهَا، وَخَيْرِ مَا جُبِلَتْ عَلَيْهِ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا، وَشَرِّ مَا جُبِلَتْ عَلَيْهِ
பாடம்:
வீட்டுக்கு மணப்பெண் வரும்போது (மணமகனான) ஒரு ஆண் கூற வேண்டிய பிரார்த்தனை.
1918. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் ஒரு பெண்ணை திருமணம் முடித்தால் அல்லது ஒரு அடிமையையோ அல்லது வாகனத்தையோ வாங்கினால் அதன் நெற்றி முடியை பிடித்தவாறு, “அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் கைரிஹா, வ கைரி மா ஜுபிலத் அலைஹி. வ அவூது பிக மின் ஷர்ரிஹா, வ ஷர்ரி மா ஜுபிலத் அலைஹி” என்று கூறவும்.
(பொருள்: அல்லாஹ்வே! இதன் மூலம் ஏற்படும் அனைத்து நலவுகளையும்; இதை எந்த நியதியின்படி படைக்கப்பட்டுள்ளதோ அந்த நலவுகளையும் உன்னிடம் கேட்கிறேன். மேலும் இதன் மூலம் ஏற்படும் அனைத்து தீங்குகளையும்; இதை எந்த நியதியின்படி படைக்கப்பட்டுள்ளதோ அந்த தீங்குகளையும் விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.)
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)