🔗

இப்னுமாஜா: 2056

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّ جَمِيلَةَ بِنْتَ سَلُولَ، أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: وَاللَّهِ مَا أَعْتِبُ عَلَى ثَابِتٍ فِي دِينٍ، وَلَا خُلُقٍ، وَلَكِنِّي أَكْرَهُ الْكُفْرَ فِي الْإِسْلَامِ، لَا أُطِيقُهُ بُغْضًا، فَقَالَ لَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَتَرُدِّينَ عَلَيْهِ حَدِيقَتَهُ؟» قَالَتْ: نَعَمْ، فَأَمَرَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَأْخُذَ مِنْهَا حَدِيقَتَهُ، وَلَا يَزْدَادَ


2056. ஜமீலா பின்த் ஸலூல் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! (என் கணவர்) ஸாபித் பின் கைஸின் மார்க்கப் பற்றையோ, குணத்தையோ நான் குறைகூறவில்லை. ஆனால், நான் இஸ்லாத்தில் இருந்துகொண்டே இறைநிராகரிப்புக்குரிய செயல்களைச் செய்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன்; (அவரை) வெறுப்பதை என்னால் கட்டுப்படுத்தமுடியவில்லை என்று கூறினார்.

அப்போது, ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘ஸாபித், உனக்கு (மணக்கொடையாக) அளித்த தோட்டத்தை நீ அவருக்கே திருப்பித் தந்துவிடுகிறாயா?’ என்று கேட்டார்கள் அவர், ‘ஆம் (தந்து விடுகிறேன்)’ என்று கூறினார். எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸாபித் பின் கைஸுக்கு அவரின் தோட்டத்தை தன் மனைவியிடமிருந்து பெற்றுக்கொள்ள கட்டளையிட்டார்கள். (வேறு எதையும்)  அதிகபடுத்தவில்லை.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)