🔗

இப்னுமாஜா: 2130

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّ رَجُلًا جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي نَذَرْتُ أَنْ أَنْحَرَ بِبُوَانَةَ، فَقَالَ: «فِي نَفْسِكَ شَيْءٌ مِنْ أَمْرِ الْجَاهِلِيَّةِ؟» قَالَ: لَا، قَالَ: «أَوْفِ بِنَذْرِكَ»


2130. ஒரு மனிதர், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் புவானா என்ற இடத்தில் அறுத்துப் பலியிட வேண்டும் என்று நேர்ச்சை செய்திருக்கின்றேன்” என்று கூறினார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், அறியாமைக் காலத்தின்         (மக்கள் செய்யும் இணைவைப்பான) நேர்ச்சை வகையைதான் நாடினீரா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் இல்லை என்று கூறினார். அப்படியென்றால் “நீ உன்னுடைய நேர்ச்சையை நிறைவேற்றிக் கொள் என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)