🔗

இப்னுமாஜா: 2158

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

عَلَّمْتُ رَجُلًا الْقُرْآنَ، فَأَهْدَى إِلَيَّ قَوْسًا، فَذَكَرْتُ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «إِنْ أَخَذْتَهَا أَخَذْتَ قَوْسًا مِنْ نَارٍ» ، فَرَدَدْتُهَا


2158. உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ஒருவருக்குக் குர்ஆனைக் கற்றுக்கொடுத்தேன். ஆகவே அவர் எனக்கொரு வில்லை அன்பளிப்பாகக் கொடுத்தார். நான் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறினேன். அதற்கவர்கள், “அதை நீர் எடுத்துக்கொண்டால் நரகத்திலிருந்து ஒரு வில்லை எடுத்துக்கொண்டுவிட்டீர்” என்று கூறினார்கள். ஆகவே நான் அதைத் திருப்பிக் கொடுத்துவிட்டேன்.