مَا أَخْطَأَنِي ابْنُ مَسْعُودٍ عَشِيَّةَ خَمِيسٍ إِلَّا أَتَيْتُهُ فِيهِ، قَالَ: فَمَا سَمِعْتُهُ يَقُولُ لِشَيْءٍ قَطُّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا كَانَ ذَاتَ عَشِيَّةٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: فَنَكَسَ ” قَالَ: «فَنَظَرْتُ إِلَيْهِ، فَهُوَ قَائِمٌ مُحَلَّلَةً، أَزْرَارُ قَمِيصِهِ، قَدْ اغْرَوْرَقَتْ عَيْنَاهُ، وَانْتَفَخَتْ أَوْدَاجُهُ» قَالَ: أَوْ دُونَ ذَلِكَ، أَوْ فَوْقَ ذَلِكَ، أَوْ قَرِيبًا مِنْ ذَلِكَ، أَوْ شَبِيهًا بِذَلِكَ
பாடம்:
நபி (ஸல்) அவர்கள் குறித்து, ஹதீஸை அறிவிப்பதில் பேணுதலுடன் இருத்தல்.
23. அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
வியாழக்கிழமை மாலை வேளையில் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் வீட்டுக்கு நான் தவறாமல் சென்றுவிடுவேன்; அவர்கள் எந்த விஷயத்தைப் பற்றியும் (உறுதியாகத் தெரியாமல்), “நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்று கூறியதாக நான் ஒருபோதும் கேட்டதில்லை.
ஒருநாள் மாலையில் அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்று சொன்னார்கள். அப்போது அவர்கள் தலை குனிந்து நின்றார்கள். நான் அவர்களைப் பார்த்தேன். அவர்கள் தம் சட்டையின் பொத்தான்களை அவிழ்த்துவிட்டிருந்தார்கள். அவர்களின் கண்கள் கலங்கியிருந்தன; நரம்புகள் புடைத்திருந்தன.
(அறிவித்த பிறகு), “அது அதைவிடக் குறைவானதாகவோ, அதைவிட அதிகமானதாகவோ, அதற்கு நெருக்கமானதாகவோ, அல்லது அதை ஒத்ததாகவோ இருக்கலாம்” என்று (தம் அறிவிப்பில் பிழை வந்துவிடுமோ என்ற அச்சத்தால்) கூறினார்கள்.