«الْحَيَّةُ فَاسِقَةٌ، وَالْعَقْرَبُ فَاسِقَةٌ، وَالْفَأْرَةُ فَاسِقَةٌ، وَالْغُرَابُ فَاسِقٌ»
فَقِيلَ لِلْقَاسِمِ: أَيُؤْكَلُ الْغُرَابُ قَالَ: «مَنْ يَأْكُلُهُ؟ بَعْدَ قَوْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاسِقًا»
3249. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பாம்பு, தேள், எலி, (நீர்க்)காகம் ஆகியவை தீங்கிழைப்பவையாகும்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
(அப்துர்ரஹ்மான் பின் காஸிம் (ரஹ்) கூறுகிறார்:)
(எனது தந்தை) காஸிம் பின் முஹம்மது பின் அபூபக்ர் (ரஹ்) அவர்களிடம், “காகத்தை சாப்பிடலாமா?” எனக் கேட்கப்பட்ட போது “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஃபாஸிக்” என்று கூறிய பிறகு அதை யார் சாப்பிடுவார்?“ என்று கூறினார்.