أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ، فَكَلَّمَهُ، فَجَعَلَ تُرْعَدُ فَرَائِصُهُ، فَقَالَ لَهُ: «هَوِّنْ عَلَيْكَ، فَإِنِّي لَسْتُ بِمَلِكٍ، إِنَّمَا أَنَا ابْنُ امْرَأَةٍ تَأْكُلُ الْقَدِيدَ»
قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: إِسْمَاعِيلُ وَحْدَهُ، وَصَلَهُ
பாடம்:
உலர்ந்த இறைச்சி.
3312. ஒரு மனிதர் முதன் முதலாக (மன்னர்) நபி (ஸல்) அவர்களை சந்திக்க வந்து பேச ஆரம்பித்தார். (பொதுவாக மன்னர்கள் முன்னிலையில் நடுநடுங்கிக் கொண்டு தான் மக்கள் நிற்பார்கள்) நபி (ஸல்) அவர்களையும் அது போல் கருதிக்கொண்டு உடல் நடுங்கினார்.
நபி (ஸல்) அவர்கள், ‘சாதாரணமாக இருப்பீராக! நான் அரசன் அல்ல. உலர்ந்த இறைச்சியைச் சாப்பிட்டு வந்த குரைஷி குலத்துப் பெண்ணுடைய மகன் தான் நான்‘ என்று அவரிடம் கூறி அவரை சகஜ நிலைக்குக் கொண்டு வந்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ மஸ்வூத் (ரலி)
இப்னு மாஜா கூறுகிறார்:
ஜஃபர் பின் அவ்ன் அவர்களிடமிருந்து அறிவிப்பவர்களில் இஸ்மாயீல் பின் அஸத் தான் இந்த செய்தியை நபி (ஸல்) அவர்களின் கூற்றாக அறிவித்துள்ளார். (ஆனால் இது தவறாகும்)