🔗

இப்னுமாஜா: 3353

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

دَخَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَيْتَ، فَرَأَى كِسْرَةً مُلْقَاةً، فَأَخَذَهَا فَمَسَحَهَا، ثُمَّ أَكَلَهَا، وَقَالَ: «يَا عَائِشَةُ أَكْرِمِي كَرِيمًا، فَإِنَّهَا مَا نَفَرَتْ عَنْ قَوْمٍ قَطُّ، فَعَادَتْ إِلَيْهِمْ»


பாடம்:

உணவை வீசி எறிவது குறித்து வந்துள்ள தடை.

3353. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்) வீட்டிற்குள் வந்தார்கள். அப்போது (தரையில்) வீசப்பட்டிருந்த ஒரு ரொட்டித் துண்டைக் கண்டார்கள். அதை எடுத்து துடைத்து உண்டார்கள். பிறகு, “ஆயிஷாவே! கண்ணியமானதை (அதாவது உணவை) கண்ணியப்படுத்து. ஏனெனில் (உணவு எனும்) நற்பாக்கியம் ஒரு சமுதாயத்தை விட்டு நீங்கிவிட்டால் அது ஒருபோதும் திரும்பி வருவதில்லை” என்று கூறினார்கள்.