قَالَتْ أُمُّ سَلَمَةَ: يَا رَسُولَ اللَّهِ لَا يَزَالُ يُصِيبُكَ فِي كُلِّ عَامٍ وَجَعٌ مِنَ الشَّاةِ الْمَسْمُومَةِ الَّتِي أَكَلْتَ، قَالَ: «مَا أَصَابَنِي شَيْءٌ مِنْهَا، إِلَّا وَهُوَ مَكْتُوبٌ عَلَيَّ وَآدَمُ فِي طِينَتِهِ»
3546. உம்மு ஸலமா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் உட்கொண்ட விஷம் தோய்ந்த ஆட்டின் காரணமாக ஒவ்வொரு வருடமும் உங்களுக்கு உடலில் பாதிப்பு ஏற்படுகிறதே?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆதம் (அலை) அவர்கள் களிமண்ணாக இருந்தபோதே என்மீது எழுதப்பட்டுவிட்டதைத் தவிர, வேறெதுவும் அதிலிருந்து எனக்கு ஏற்படவில்லை” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)