مَرَّ بِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا مُضْطَجِعٌ عَلَى بَطْنِي، فَرَكَضَنِي بِرِجْلِهِ وَقَالَ: «يَا جُنَيْدِبُ، إِنَّمَا هَذِهِ ضِجْعَةُ أَهْلِ النَّارِ»
3724. அபூதர் (ஜுன்துப் பின் அப்துல்லாஹ்-ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் என்னுடைய வயிற்றின் மீது (குப்புறப்) படுத்திருக்கும் போது என்னருகில் கடந்து சென்ற நபி (ஸல்) அவர்கள், “என்னை அவர்களின் காலால் தட்டி எனதருமை ஜுன்துபே! இவ்வாறு குப்புறப்படுப்பது நரகவாசிகள் படுக்கும் முறையாகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு திஹ்ஃபா அல்ஃகிஃபாரீ..
(குறிப்பு: அபூதர் (ரலி) அவர்களின் இயற்பெயர் என்ன என்பதில் பல கருத்து உள்ளது. அதில் ஒரு கருத்தே ஜுன்துப் என்பது. இதில் ஜுனைதிப் என்று வருவதால் ஜுன்துப் என்று இருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர்)