أَنَّ أَعْرَابِيًّا قَالَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ شَرَائِعَ الْإِسْلَامِ قَدْ كَثُرَتْ عَلَيَّ، فَأَنْبِئْنِي مِنْهَا بِشَيْءٍ أَتَشَبَّثُ بِهِ قَالَ: «لَا يَزَالُ لِسَانُكَ رَطْبًا مِنْ ذِكْرِ اللَّهِ عَزَّ وَجَلَّ»
3793. அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாம் வகுத்துத் தந்துள்ள சட்டதிட்டங்கள் எனக்கு அதிகமாகத் தென்படுகின்றன. (என் பலவீனத்தால் அவற்றை நிறைவேற்ற முடியாமல் போய்விடுகிறது). நான் அவற்றில் உறுதியாகச் செயல்படுத்துவதற்கான வழிமுறை ஒன்றை எனக்குச் சொல்லித் தாருங்கள்” என ஒரு மனிதர் கேட்டார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உமது நாவு இறைத்துதியால் (எப்போதும்) நனைந்தே இருக்கட்டும்” என்று கூறினார்கள்.