سَمِعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا يَقُولُ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدَ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ، وَحْدَكَ لَا شَرِيكَ لَكَ، الْمَنَّانُ، بَدِيعُ السَّمَوَاتِ وَالْأَرْضِ، ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ، فَقَالَ: «لَقَدْ سَأَلَ اللَّهَ بِاسْمِهِ الْأَعْظَمِ، الَّذِي إِذَا سُئِلَ بِهِ أَعْطَى، وَإِذَا دُعِيَ بِهِ أَجَابَ»
3858. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர், அல்லாஹும்ம! இன்னீ அஸ்அலுக பிஅன்ன லகல் ஹம்த், லா இலாஹ இல்லா அன்த, வஹ்தக, லா ஷரீக லக, அல்மன்னான், பதீஉஸ் ஸமாவாதி வல்அர்ள். துல்ஜலாலி வல்இக்ராம்
(பொருள்: அல்லாஹ்வே! எல்லாப் புகழும் உனக்கே உரியது என்பதன் மூலம் நான் உன்னிடம் கேட்கிறேன்; உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை, நீ தனித்தவன், உனக்கு இணையில்லை. பேருபகாரன், வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றிப் படைத்தவன், மகத்துவமும் கண்ணியமும் உடையவன்.)
என்று கூறுவதை நபி (ஸல்) அவர்கள் செவியுற்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவர் அல்லாஹ்வின் மகத்தான பெயரைக் கொண்டு கேட்டிருக்கிறார். அதன் மூலம் அவனிடம் கேட்டால் அவன் கொடுக்கிறான். அதன் மூலம் அவனை அழைத்தால் அவன் பதிலளிக்கிறான்” என்று கூறினார்கள்.