مَا مِنْ عَبْدٍ يَقُولُ فِي صَبَاحِ كُلِّ يَوْمٍ، وَمَسَاءِ كُلِّ لَيْلَةٍ: بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ، وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ، ثَلَاثَ مَرَّاتٍ، فَيَضُرَّهُ شَيْءٌ
قَالَ: وَكَانَ أَبَانُ قَدْ أَصَابَهُ طَرَفٌ مِنَ الْفَالِجِ، فَجَعَلَ الرَّجُلُ يَنْظُرُ إِلَيْهِ، فَقَالَ لَهُ أَبَانُ: «مَا تَنْظُرُ إِلَيَّ؟ أَمَا إِنَّ الْحَدِيثَ كَمَا قَدْ حَدَّثْتُكَ، وَلَكِنِّي لَمْ أَقُلْهُ يَوْمَئِذٍ، لِيُمْضِيَ اللَّهُ عَلَيَّ قَدَرَهُ»
3869. ஒரு அடியார் ஒவ்வொரு காலையிலும் மாலையிலும், “பிஸ்மில்லாஹில்லதீ லா யளுர்ரு மஅஸ்மிஹீ ஷைஉன் ஃபில்அர்ளி, வலா ஃபிஸ்ஸமாஇ, வஹுவஸ் ஸமீஉல் அலீம்” என்று மூன்று முறை கூறினால் அவருக்கு எந்த ஒன்றும், தீங்கு செய்யாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.
(இதன் பொருள்: அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஆரம்பிக்கிறேன்). அவனுடைய பெயருடன் இருக்கும்போது வானத்திலோ, பூமியிலோ எந்தப் பொருளும் தீங்கு செய்யாது. மேலும், அவன் யாவற்றையும் செவியுறுபவன்; நன்கறிபவன்.)
அறிவிப்பவர்: உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)
இந்த ஹதீஸை அறிவித்த அபான் (ரஹ்) அவர்களுக்குப் பக்கவாதம் ஏற்பட்டிருந்தது. அப்போது ஒருவர் அபான் (ரஹ்) அவர்களைப் பார்த்தபோது, அபான் (ரஹ்) அவர்கள், “என்னைப் பார்க்கிறீர்களா? நான் உங்களுக்கு அறிவித்த ஹதீஸ் உண்மையானதே. ஆனால், அல்லாஹ் தன் விதியை என்மீது நிறைவேற்றுவதற்காகவோ (என்னவோ) அன்று நான் அந்த துஆவைக் கூறவில்லை” என்று கூறினார்கள்.