🔗

இப்னுமாஜா: 3884

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا خَرَجَ مِنْ مَنْزِلِهِ قَالَ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أَضِلَّ، أَوْ أَزِلَّ، أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ، أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ»


பாடம்:

ஒருவர் வீட்டிலிருந்து வெளியே செல்லும்போது கூறவேண்டிய பிரார்த்தனை.

3884. உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது, “அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க அன் அழில்ல அவ் அஸில்ல அவ் அள்ளிம அவ் உள்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய” என்று கூறும் வழமையுடையவர்களாக இருந்தார்கள்.

(பொருள்: அல்லாஹ்வே! நான் பிறரை வழிக்கெடுக்காமலும், சறுகி விடச் செய்யாமலும்; நான் அநீதி இழைக்காமலும், அநீதி இழைக்கப்படாமலும்; மூடனாகாமலும், (பிறரை) மூடராக்காமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்).