🔗

இப்னுமாஜா: 3906

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

الرُّؤْيَا ثَلَاثٌ: فَبُشْرَى مِنَ اللَّهِ، وَحَدِيثُ النَّفْسِ، وَتَخْوِيفٌ مِنَ الشَّيْطَانِ، فَإِنْ رَأَى أَحَدُكُمْ رُؤْيَا تُعْجِبُهُ فَلْيَقُصَّهَا، إِنْ شَاءَ، وَإِنْ رَأَى شَيْئًا يَكْرَهُهُ، فَلَا يَقُصَّهُ عَلَى أَحَدٍ، وَلْيَقُمْ يُصَلِّي


பாடம்:

கனவுகள் மூன்று வகை.

3906. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கனவுகள் மூன்று வகையாகும். நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வரும் நற்செய்தியாகும். இன்னொரு வகை ஒரு மனிதரின் உள்ளத்தில் தோன்றுகின்ற பிரமையாகும். இன்னொரு வகை ஷைத்தானிடமிருந்து வருவதாகும்.

ஆகவே, உங்களில் ஒருவர் தமக்கு விருப்பமான கனவை கண்டால் அவர் விரும்பினால் மற்றவருக்குச் சொல்லட்டும்.

தாம் விரும்பாத கனவொன்றைக் கண்டால், அதைப் பற்றி யாரிடமும் தெரிவிக்க வேண்டாம். உடனே அவர் எழுந்து (இறைவனைத்) தொழட்டும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)