«إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنَ اللَّيْلِ، فَلَا يُدْخِلْ يَدَهُ فِي الْإِنَاءِ، حَتَّى يُفْرِغَ عَلَيْهَا مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا، فَإِنَّ أَحَدَكُمْ لَا يَدْرِي فِيمَ بَاتَتْ يَدُهُ»
பாடம்:
ஒருவர் (உறங்கி) விழித்தெழுந்தால் கைகளைக் கழுவதற்கு முன் உளூச் செய்யும் பாத்திரத்தில் கைகளை விடலாமா?
393. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரவில் உங்களில் ஒருவர் (உறங்கி) விழித்தெழுந்தால் இரண்டு அல்லது மூன்று முறை கைகளில் தண்ணீர் ஊற்றிக் கழுவாமல் தனது கையைப் பாத்திரத்தில் விடவேண்டாம். ஏனெனில் இரவில் அவரது கை எங்கெங்கு பட்டது என்பதை அவர் அறிய மாட்டார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)