🔗

இப்னுமாஜா: 3992

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«افْتَرَقَتِ الْيَهُودُ عَلَى إِحْدَى وَسَبْعِينَ فِرْقَةً، فَوَاحِدَةٌ فِي الْجَنَّةِ، وَسَبْعُونَ فِي النَّارِ، وَافْتَرَقَتِ النَّصَارَى عَلَى ثِنْتَيْنِ وَسَبْعِينَ فِرْقَةً، فَإِحْدَى وَسَبْعُونَ فِي النَّارِ، وَوَاحِدَةٌ فِي الْجَنَّةِ،

وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَتَفْتَرِقَنَّ أُمَّتِي عَلَى ثَلَاثٍ وَسَبْعِينَ فِرْقَةً، وَاحِدَةٌ فِي الْجَنَّةِ، وَثِنْتَانِ وَسَبْعُونَ فِي النَّارِ» ، قِيلَ: يَا رَسُولَ اللَّهِ مَنْ هُمْ؟ قَالَ: «الْجَمَاعَةُ»


3992. “யூதர்கள் 71 கூட்டமாக பிரிந்தனர். அவர்களில் 1 கூட்டம் சொர்க்கம் செல்வர். 70 கூட்டத்தினர் நரகம் செல்வர்.

கிருத்தவர்கள் 72 கூட்டமாக பிரிந்தனர். அவர்களில் 71 கூட்டத்தினர் நரகம் செல்வர். 1 கூட்டம் சொர்க்கம் செல்வர்.

இந்த முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! எனது சமுதாயத்தினர் 73 கூட்டத்தினராக பிரிவர். அவர்களில் ஒரு கூட்டம் சொர்க்கம் செல்வர். (மற்ற) 72 கூட்டத்தினர் நரகம் செல்வர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! சொர்க்கம் செல்லும் (அந்தக்) கூட்டம் யார்? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “ஜமாஅத் (ஜமாஅஹ்)” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அவ்ஃப் பின் மாலிக் (ரலி)