🔗

இப்னுமாஜா: 422

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

قَالَ جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُ عَنِ الْوُضُوءِ، فَأَرَاهُ ثَلَاثًا ثَلَاثًا، ثُمَّ قَالَ: «هَذَا الْوُضُوءُ، فَمَنْ زَادَ عَلَى هَذَا فَقَدْ أَسَاءَ، أَوْ تَعَدَّى، أَوْ ظَلَمَ»


422.

நபி (ஸல்) அவர்களிடம் கிராமவாசி ஒருவர் வந்து உளூ செய்யும் முறைபற்றி கேட்டார்.அதற்கு நபியவர்கள் மூன்று, மூன்று தடவைதான். இது தான் உளூ ஆகும். யார் இதை விட அதிகப்படுத்துகிறாரோ அவர் மாறு செய்துவிட்டார், வரம்பு மீறிவிட்டார் அல்லது அநீதி இழைத்து விட்டார் என்று கூறினார்கள்.