🔗

இப்னுமாஜா: 4341

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلَّا لَهُ مَنْزِلَانِ: مَنْزِلٌ فِي الْجَنَّةِ، وَمَنْزِلٌ فِي النَّارِ، فَإِذَا مَاتَ، فَدَخَلَ النَّارَ، وَرِثَ أَهْلُ الْجَنَّةِ مَنْزِلَهُ، فَذَلِكَ قَوْلُهُ تَعَالَى: {أُولَئِكَ هُمُ الْوَارِثُونَ} [المؤمنون: 10] “

وهذا آخر سنن الإمام الحافظ أبي عبد الله محمد بن يزيد القزويني.


4341. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் யாராக இருந்தாலும் அவருக்கு (மறுமையில்) இரண்டு இருப்பிடங்கள் உண்டு. ஒன்று சொர்க்கத்தில் உள்ள இருப்பிடம். மற்றொன்று நரகத்தில் உள்ள இருப்பிடம். அவர் இறந்து நரகத்தில் நுழைந்தால் சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் உள்ள அவரின் இருப்பிடத்திற்கு வாரிசாகுவார்கள். இதைப் பற்றியே “பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்திற்கு அவர்களே உரிமையாளர்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 23:10 ) என்ற அல்லாஹ்வின் சொல் குறிப்பிடுகிறது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

இந்த செய்தி (அல்ஹாபிழ் அபூஅப்தில்லாஹ் முஹம்மது பின் யஸீத் அல்கஸ்வீனீ என்னும்) இப்னு மாஜாவின் கடைசி செய்தியாகும்.