قَالَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «انْطَلِقُوا» فَانْطَلَقْنَا إِلَى بَيْتِ عَائِشَةَ، وَأَكَلْنَا وَشَرِبْنَا، فَقَالَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنْ شِئْتُمْ نِمْتُمْ هَاهُنَا، وَإِنْ شِئْتُمُ انْطَلَقْتُمْ إِلَى الْمَسْجِدِ» قَالَ: فَقُلْنَا: بَلْ نَنْطَلِقُ إِلَى الْمَسْجِدِ
752. கைஸ் பின் திக்ஃபா அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், “நடங்கள்” என்று கூறினார்கள். நாங்கள் (அவர்களுடன்) நடந்து சென்று (இறுதியில்) ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டை வந்தடைந்தோம். அங்கு உணவு சாப்பிட்டோம்; நீர் அருந்தினோம். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், “நீங்கள் விரும்பினால் இங்கே தூங்கலாம்! விரும்பினால் பள்ளியில் தூங்கலாம்! என்று கூறினார்கள். அதற்கு நாங்கள், “இல்லை! நாங்கள் பள்ளிக்கே செல்கிறோம்” என்று கூறினோம்.