«كُلُّ صَلَاةٍ لَا يُقْرَأُ فِيهَا بِأُمِّ الْكِتَابِ فَهِيَ خِدَاجٌ»
840. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(ஃபாதிஹதுல் கிதாப்) திருக்குர்ஆனின் தோற்றுவாயான அல்ஹம்து ஸூராவை ஓதாமல் தொழப்படும் எந்தத் தொழுகையும் குறை உடையதாகும்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)