🔗

இப்னுமாஜா: 971

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

ثَلَاثَةٌ لَا تُرْفَعُ صَلَاتُهُمْ فَوْقَ رُءُوسِهِمْ شِبْرًا: رَجُلٌ أَمَّ قَوْمًا وَهُمْ لَهُ كَارِهُونَ، وَامْرَأَةٌ بَاتَتْ وَزَوْجُهَا عَلَيْهَا سَاخِطٌ، وَأَخَوَانِ مُتَصَارِمَانِ


971. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூவரின் தொழுகைகள் அவர்களின் தலைக்கு மேல் ஒரு சாண் அளவும் (கூட) உயர்த்தப்படாது. (அவர்கள் யாரெனில்) மக்கள் வெறுத்தும் அவர்களுக்குத் தலைமை ஏற்பவர்; கணவன் தன் மீது கோபமாக இருக்கும் நிலையில் இரவைக் கழித்த பெண்; தங்களுக்குள் நட்புறவை முறித்துக் கொண்ட இரு சகோதரர்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)