🔗

பைஹகீ-குப்ரா: 13498

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

أَنَّ هِنْدَ بِنْتَ عُتْبَةَ قَالَتْ: يَا نَبِيَّ اللهِ بَايِعْنِي قَالَ: ” لَا أُبَايِعُكِ حَتَّى تُغَيِّرِي كَفَّيْكِ، كَأَنَّهَا كَفَّا سَبُعٍ


13498. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் (பைஅத் எனும்) உறுதிமொழி வாங்கிக் கொள்ளுங்கள்” என்று ஹிந்த் பின்த் உத்பா (ரலி) கூறினார். அதற்கு, “நீ உமது இரு கைகளையும் (மருதாணியால்) நிறம் மாற்றாத வரை உம்மிடம் உறுதிமொழி வாங்கமாட்டேன்; அவ்விரண்டும் விலங்கின் கரம் போன்று உள்ளது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.